இலங்கை துறைமுகத்தின் மூலம் நாட்டிற்கு கிடைத்துள்ள நற்செய்தி!
இலங்கையின் துறைமுகம் லாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகம் 24 பில்லியன் ரூபா லாபத்தை ஈட்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல கப்பல்கள்

இதேவேளை எதிர்காலத்தில் மேலும் 6பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சுமார் இரண்டாயிரம் பயணிகளுடன் பாரிய கப்பல் ஒன்று கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதேவேளை மற்றுமொரு சொகுசு கப்பலான எம்.வி அசமாரா குவெஸ்ட் (MV Azamara Quest) என்ற சொகுசு கப்பலும் டிசம்பர் 5 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அறிவித்துள்ளது.
மென் சீப் 5 கப்பலின் வருகைக்குப் பின்னர், எம்.வி அசமாரா குவெஸ்ட் எனும் கப்பல், இந்த ஆண்டு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும் இரண்டாவது பயணக் கப்பலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.