கிளர்ச்சிக்கு தயாராகும் இலங்கை!! முன்னாள் அரச தலைவர் எச்சரிக்கை
sri lanka
maithri
insurgency
By Vanan
இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சி ஒன்றுக்கு தயாராகின்றனர் என்று முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உரையாற்றிய அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை தாங்க முடியாத நிலையில், பொதுமக்கள் கிளர்ச்சிக்கு தயாராவதாக தெரிவித்தார்.
ஒரே இரவில் மேற்கொள்ளப்பட்ட பொருட்களின் விலையுயர்வு காரணமாக நாடு மேலும் மேலும் துயரங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டின் பொருளாதார சுமையை ஆட்சேபித்து அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 15ஆம் திகதி போராட்டம் ஒன்றில் இணையுமாறு எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்