ரணில் அதிபரானதற்கு அறிவில்லாத போராட்டக்காரர்களின் செயற்பாடுகளே காரணம் - வீரவன்ச கடும் விமர்சனம்
ஞானமில்லாத, நோக்கமில்லாத, அறிவில்லாத போராட்டக்காரர்களின் செயற்பாடுகளின் பிரதிபலனாகவே ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவிக்கு வந்துள்ளார் என சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் வழிமுறைத் திட்டமோ, அறிவோ இல்லாத போராட்டம் காரணமாக இறுதியில் ரணில் அதிபர் பதவிக்கு வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசியல் நிகழ்ச்சி நிரல், எதிர்கால நோக்கம், விமர்சன ரீதியிலான வாசிப்பு என்று எதுவுமில்லாத காதில் தோடுகளை அணிந்த தாடிக்காரர்கள் வீரர்களாக மாறி, அழகான கதைகளை கூறி, சமூக செயற்பட்டாளர்கள், நடிகர், நடிகைகள் வந்து தூண்டி விட்டு, இறுதியில் ரணிலை அதிபர் பதவிக்கு கொண்டு வர வழியை ஏற்படுத்தினர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விளைவுகளைப் புரியாத போராட்டக்காரர்கள்

அதுமட்டுமன்றி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்திய நேரத்தை தவிர, அதற்கு முன்னர் அதிபர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.
அப்படி நடந்தால், அதிபர் பதவி தொடர்பில் அராஜக நிலைமையேற்படும் என்பதே இதற்கு காரணம். ஏன் இந்த விடயம் இளம் போராட்டகாரர்களுக்கு புரியவில்லை.
அவர்களுக்கு அதனை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு அறிவோ, தெளிவோ, புத்தியோ இருந்ததாக எமக்கு தெரியவில்லை. போராட்டகார்கள் தமது மாளிகையை முற்றுகையிட்ட போது துப்பாக்கி சூடு நடத்துமாறு உத்தரவிடாது அதிபர்வீட்டக்கு சென்றுள்ளார்.
ரணிலுக்கு வாக்களித்தமைக்கு இதுவே காரணம்
இவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏன் வாக்களிக்கப்பட்டது. அதற்கு பொதுவான காரணம் இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் தமது பாதுகாப்பு தொடர்பான மனநிலை.
எல்லாற்றுக்கும் முதல் இந்த நிலைமையை இல்லாமல் செய்ய வேண்டும். இந்த மனநிலையை ஏற்படுத்தியது யார். போராட்டகாரர்கள், இரவு வீடுகளுக்கு சென்று தீயிட்ட குழுவினர் எனவும் சாடியுள்ளார்.
அதுமட்டுமன்றி நாடாளுமன்றத்தை முற்றுகையிட சுனில் ஹந்துன்நெத்தி, லால் காந்த போன்றவர்கள் சென்றிருந்தனர். நாடாளுமன்றத்தை மற்றுமொரு அதிபர் செயலகமாகவும் அதிபர் மாளிகையாகவும் மாற்ற அவர்கள் முயற்சித்த நேரத்தில் அதற்கு இடமளிக்காது, அவசரகாலச் சட்டம், ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவுகளை பிறப்பித்தது, ரணில் என்று அவர்கள் நினைக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.