கடற்றொழிலாளர்களுக்கு வானிலை ஆய்வு மையம்விடுத்தள்ள முக்கிய அறிவிப்பு
வானிலை ஆய்வு மையம் கடற்றொழிலாளர்களுக்கான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், நவம்பர் 21-ம் திகதி வரை ஆழ்கடல் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சிறிலங்கா கடற்படை மற்றும் கடற்றொழில் சமூக மக்கள் அறிவுறுத்தப்படுவதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரப் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த நகர்வு
மேலும், இப்பகுதிகள் எதிர்வரும் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டி தமிழகத்தை நோக்கி நாளை (20) மற்றும் நாளை மறுநாள் (21) நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான கனமழையை எதிர்பார்ப்பதாகவும்
மேலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில்
காலை வேளையில் பனியுடனான வானிலை நிலவும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
