பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
arrest
tamil
prisoners
release
investigation
sri Lanka
TID
By Kalaimathy
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐந்து தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க ஐபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இவர்கள் ஐவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்