சென்னையில் இலங்கை தமிழ் பெண் கொலை: நண்பன் வழங்கிய வாக்குமூலம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தகராறில், இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவருடன் சென்ற இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணை விபத்துக்குள்ளாக்கிய காரில் 6 பேர் இருந்ததாகவும், சுமன் சக்திவேல் என்பவர் காரை இயக்கி கொலை செய்ததாகவும் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொடூர கொலைக்கு காரணம்
விசாரணையில் மேலும் கருத்து வெளியிட்ட இளைஞன், “களியாட்ட விடுயில் உயிரிழந்த இளம்பெண்ணிடம் சிலர் தவறாக நடந்ததை தட்டிக்கேட்டபோது தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பாளர்களிடம் முறையிட்டவுடன் எங்களையும், தாக்குதல் நடத்தியவர்களையும் பாரில் இருந்து வெளியேற்றினர்.
கோபத்துடன் வெளியே வந்த கும்பல், தங்கள் மீது காரை ஏற்றியதால் இளம்பெண் உயிரிழந்தார்” என கூறியுள்ளார்.
இது குறித்த விசாரணையில் களியாட்ட விடுதியில் மது பரிமாறப்பட்டதால் ஏற்பட்ட மோதலே இந்த கொடூர கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையில் ஹோட்டலில் உள்ள பார் சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |