கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள் - ஒரே குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
                                    
                    Sri Lanka
                
                                                
                    Southern Province
                
                        
        
            
                
                By Dharu
            
            
                
                
            
        
    கதிர்காமம் – கொச்சிபத்தான பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.
கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை விற்பனை செய்யும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தகர்களுக்கே, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன.
கதிர்காமம் – கொச்சிபத்தான பகுதியில் அண்மைக் காலமாக, இரத்தினக்கல் தோண்டும் பணிகள் இடம்பெறுகின்றன.
ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை

இந்தநிலையில், மூன்று பேருக்கு 5 இரத்தினக்கற்கள் கிடைத்ததை அடுத்து, அந்த இடத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவருக்கும் கிடைத்த 5 இரத்தினக்கற்களும், எலஹர பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு, சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்