இலங்கை தொடர்பில் சீன அதிகாரிகள் அளித்துள்ள உறுதிமொழி
சீனாவிடமிருந்து எதிர்பார்க்கப்படும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் அந்நாட்டுக்கு செலுத்த வேண்டிய கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சீன அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு அவர் தெரிவித்தார்.
சீனாவிடம் இருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற இலங்கை எதிர்பார்க்கிறது. அந்தக் கடனில் ஒரு பில்லியன் சீனக் கடனை அடுத்த ஜூலையில் திருப்பிச் செலுத்தவும், மீதமுள்ள 1.5 பில்லியன் கடன் வசதியாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நாடான இலங்கை நெருக்கடி நிலையிலும் இலங்கையின் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்கும் என கலாநிதி பாலித கொஹன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த கடனுதவி கிடைக்கும் காலவரையறையை சரியாக கூற முடியாது எனவும் அதற்கு சிறிது காலம் பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
