இலங்கையின் நிலைமை மோசம் -உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் சுட்டிக்காட்டு
கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் நிலைமை மோசமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்னகொம் கெப்ரயோசிஸ் சுட்டிகாட்டியுள்ளார்.
ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவில் காணப்படும் நிலவரம் பெரிதும் கரிசனையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் இலங்கை, நேபாளம், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து மற்றும் எகிப்து ஆகியவை அவசர தேவைகளைக் கொண்ட நாடுகள் என்று அவர் விவரித்தார். அந்த நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படும் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு தடுப்பூசி மற்றும் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது என்று அவர் வலியுறுத்தினார்.