இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை! சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் 80 வீதமான ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மூடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாட்டில் நிலவி வரும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டு நிலையினால் இவ்வாறு ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை மூட நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மரக்கறி விலை அதிகரிக்கும் ஹோட்டல்களை மூடுவதற்கான மற்றுமொரு ஏது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு, மரக்கறி விலை ஏற்றம் என்பனவற்றினால் ஒரு பொதி மரக்கறி சாப்பாட்டின் விலை 180 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.