போராட்டக்காரர்கள் உருவாக்கப்பட்டது அடுத்த கிராமம்
கொழும்பில் போராட்டகார்கள் அருகில் தற்காலிக கூடாரங்களை அமைந்துள்ளதுடன் அதற்கு மைனா கோ கம (கிராம்) என பெயரிட்டுள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டகாரர்கள் சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டகார்கள் அருகில் தற்காலிக கூடாரங்களை அமைந்துள்ளதுடன் அதற்கு மைனா கோ கம (கிராம்) என பெயரிட்டுள்ளனர்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு அரச தலைவரின் செயலகத்திற்கு எதிரில் கடந்த 19 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருவதுடன் அந்த இடத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கனவே கோட்டா கோ கம (கிராம்) என பெயரிடப்பட்டுள்ளனர்.
அலரி மாளிகைக்கு எதிரில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் உத்தரவை பெற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.
எனினும் அவ்வாறான உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. எனினும் ஏதேனும் கலவரமான சம்பவங்கள் நடந்தால், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என நீதிமன்றம் கூறியிருந்தது.