இலங்கையில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள் -தொடரும் அச்சுறுத்தல்
srilanka covid patient pcr test
By Sumithiran
இலங்கையில் இன்றையதினமும் 2371 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 2,371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 24,701 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 220 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.