இலங்கை தொடர்பில் ஐ.நா எச்சரிக்கை!! அறிக்கையும் வெளிவந்தது
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இலங்கை பல சவால்களுக்கு முகம்கொடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடிகளின் தொடர்ச்சியாக இந்த வருடம் உணவுப்பற்றாக்குறை, டொலர் கையிருப்பு வீழ்ச்சி, உயர் கடன் இடர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைவரம் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காரணிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது
. கொரோனா பரவலின் புதிய அலைகள், தொழிற்சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், விநியோக முறைகளில் ஏற்பட்டுள்ள சவால்கள், அதிகரித்துச்செல்லும் பணவீக்கத்தினால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் போன்ற காரணிகள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையை பொறுத்தமட்டில் 2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 சதவீதமாக அமையக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகார திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.