அமெரிக்க கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது! ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்துக்கிடையில், உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க கப்பல்களுக்கு மீண்டும் திறக்கப்படாது என்று ஈரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானின் உயர்நிலை ஆலோசனை அமைப்பான எக்ஸ்பிடியன்சி அமைப்பின் உறுப்பினர் ஒருவர், அமெரிக்க கப்பல்கள் பெர்சியன் வளைகுடா பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், தற்போதைய சூழலில் அவற்றுக்கு நீரிணை வழியே செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை
இந்த மோதலுக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் 20 சதவீதம் இந்த கடல்சந்தி வழியாகவே நடைபெறுவதால், தற்போதைய நிலை உலக எரிசக்தி சந்தைகளிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கடல்சந்தியை திறந்தவையாக வைத்திருக்க அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் கடற்படைக் கப்பல்களை அனுப்பும் முயற்சியில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால் உலக எண்ணெய் விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |