இங்கிலாந்து முழுவதும் மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு
70 ஆண்டுகள் நிறைவு விழா
பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத் அரியணை ஏறி, 70 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் கொண்டாட்டங்கள் இன்றுடன் நிறைவுக்கு வரவுள்ளன.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 70 ஆண்டுகள் நிறைவு விருந்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட வேல்ஸ் இளவரசர் சார்லள்ஸ், தனது தாயாருக்கு இதயபூர்வமான மரியாதையை செலுத்தினார்.
தமது சிரிப்பு அழுகை என்பதையும் தாண்டி, மிக முக்கியமாக கடந்த 70 ஆண்டுகளாக தமக்காக மகாராணி இருந்தார் என சார்லள்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் சேவையே தனது தாயாரை காலையில் தூயில் எழச் செய்கின்றது எனவும் அவருக்கு உலக நாடுகள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் வேல்ஸ் இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் வீதிகளில் விருந்து
இந்த நிலையில் அரியணை ஏறி 70 ஆண்டுகள் பூர்த்தி அடைவதை குறிக்கும் கொண்டாட்டங்கள் பக்கிங்ஹேம் அரண்மனைக்கு அருகில் இடம்பெறும் அணிவகுப்புடன் நிறைவுக்கு வரவுள்ளது.
மகாராணியின் 70 ஆண்டுகால முடியாட்சியின் முக்கிய தருணங்களை சித்தரிக்கும் வகையிலான விழா ஊர்வலமும் நடத்தப்படவுள்ளது.
மிகப் பெரிய 70 ஆண்டு நிறைவு விருந்து எனப்படும் இங்கிலாந்து முழுவதும் வீதிகளில் விருந்துகள் இடம்பெறவுள்ளன.
மகாராணி பயண அசௌகரியம் காரணமாக நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.