காதலுக்கு தாய் எதிர்ப்பு - உயர்தர மாணவியின் விபரீத முடிவு
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
மொனராகலை நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை (07) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொனராகலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கங்கோடாகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார்.
இளைஞன் ஒருவருடன் காதல் உறவில்

இவர் இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், தாயின் எதிர்ப்பு காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது. மொனராகலை தலைமையக காவல்துறை பரிசோதகர் பி. எஸ். சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி