பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: வெளியான பின்னணி

Sri Lanka Police Sri Lanka Crime
By Raghav Jan 12, 2025 01:00 PM GMT
Report

புதிய இணைப்பு

கண்டி (Kandy) - தவுலகல பகுதியில் வானில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடத்தப்பட்ட மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை காவல்துறையினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கனடாவின் புதிய பிரதமர் தேர்வு: அனிதா இந்திராவின் எதிர்பாராத அறிவிப்பு!

கனடாவின் புதிய பிரதமர் தேர்வு: அனிதா இந்திராவின் எதிர்பாராத அறிவிப்பு!

கடத்தல் சம்பவம்

குறித்த மாணவி தவுலகல, ஹன்தெஸ்ஸ பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த நிலையில், நேற்று (11) காலை தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: வெளியான பின்னணி | Student Kidnapped In Van In Gelioya Kandy

இது தொடர்பாக தவுலகல காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வான் நேற்று(11) பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலன்னறுவை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (12) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வானின் சாரதி தவுலகல காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய வானின் சாரதி, கம்பளை, கஹடபிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கப்பம் கோரிய சந்தேகநபர்

இதேவேளை, 19 வயதான மாணவியைக் கடத்திச் சென்ற சந்தேகநபரான இளைஞன், முதலில் 5 மில்லியன் ரூபாவை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: வெளியான பின்னணி | Student Kidnapped In Van In Gelioya Kandy

இருப்பினும், பின்னர் அவர் அதை 3 மில்லியனாகக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் மாணவியின் தந்தைக்குச் சொந்தமான வாகனத்தை கோரி, 200,000 ரூபாவை வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு தெரிவித்துள்ளதுடன் அதற்கு பதிலளிக்கும் விதமாக, மாணவியின் தந்தை 50,000 ரூபாவை சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புளி வாங்குபவர்களுக்கு வெளியான தகவல்!

புளி வாங்குபவர்களுக்கு வெளியான தகவல்!

முதலாம் இணைப்பு

மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை வானில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடத்திச்செல்லும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காம்பொல - மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாத்திமா ஹமீரா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான்

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான்

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் கடத்தலில் ஈடுபட்டவர் கம்பளை - கஹடபிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மொஹமட் நசீர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட நபர் சிறுமியின் உறவினர் என்பதுடன் குறித்த நபர் கத்தார் மற்றும் ஜப்பானில் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் ரக வாகனம் துருவெல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை மீட்க முன்வந்த இளைஞனுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேசில் கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோவின் இலங்கை விஜயம் : வைரலாகும் புகைப்படங்கள்

பிரேசில் கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோவின் இலங்கை விஜயம் : வைரலாகும் புகைப்படங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024