மாணவனை கன்னத்தில் அறைந்த மாணவர்கள் - நியாயப்படுத்திய ஆசிரியை(காணொளி)
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் சகமாணவர்களை கொண்டு மாணவனொருவனை அடிக்க வைக்கும் காட்சி சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன் பலரது கண்டனங்களுக்கும் உட்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாணவனை அறைந்த மாணவர்கள்
A Hindu school teacher in UP, India, asking Hindu kids in the class to hit a Muslim kid because he is Muslim! Islamophobia in India has crossed all boundaries. pic.twitter.com/HET3utip7P
— Ashok Swain (@ashoswai) August 25, 2023
த்ரபதி தியாகி என்ற ஆசிரியை இரண்டாம் வகுப்பு மாணவனை வாய்பாடு கூறுமாறு கேட்கிறார்.ஆனால் அந்த மாணவன் வாய்பாட்டை சரியாக கூறாததால் சக மாணவர்களை அழைத்து அந்த மாணவனை அறையுமாறு கூறுகிறார்.
ஆசிரியையின் கூற்றுக்கிணங்க சக மாணவர்களும் அந்த மாணவனின் கன்னத்தில் அறைகின்றனர். உடனே அந்த மாணவன் அழ ஆரம்பிக்கின்றான். இதற்கு அந்த ஆசிரியர், ஒரு குறிப்பிட்ட மதத்தை சொல்லி, இந்த மதத்தில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தாததால் தான் மாணவர்கள் கல்வியில் பின் தங்கி உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
ஆசிரியை அளித்த விளக்கம்

இந்த சம்பவம் குறித்து ஆசிரியை த்ரபதி தியாகி தெரிவிக்கையில்," நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னால் எழுந்து செல்ல முடியாது. அதனால், சரியாக பாடம் படிக்காத மாணவனை சக மாணவர்களை விட்டு தண்டித்தேன். இதனை காணொளி எடுத்து திரித்து என் மீது பழி சுமத்துகிறார்கள்" என்றார்.
இந்த சம்பவத்திற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.