தரமற்ற மருந்துகள் இறக்குமதி : விரைந்து செயற்பட்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள்

Sri Lanka Supreme Court of Sri Lanka Crime
By Kathirpriya Oct 31, 2023 09:12 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

போலி ஆவணங்களைத் தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்கும், அதற்கு அனுமதி வழங்கிய அரச உயர் அதிகாரிகள் இருவருக்கும் வெளிநாடு செல்வதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த மனுவினை அடிப்படையாகக்கொண்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்தின் உரிமையாளரான 'அருண தீப்தி' என அழைக்கப்படும் சுகத் ஜானக பெர்னாண்டோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளரான விஜித் குணசேகர, சுகாதார அமைச்சின் விநியோக பணிப்பாளரான கபில விக்கிரமநாயக்க ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறவுள்ள சீனக்கப்பல்..! ஆய்வுப் பணிகள் நிறைவு

இலங்கையை விட்டு வெளியேறவுள்ள சீனக்கப்பல்..! ஆய்வுப் பணிகள் நிறைவு

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி 22,500 இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்துக் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குறித்த நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த மருந்து நிறுவனம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

சுமார் 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மோசடியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

தரமற்ற மருந்துகள் இறக்குமதி : விரைந்து செயற்பட்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் | Substandard Medicine Import Travel Ban Implemented

மேலும், சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாளிகாகந்த நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர்களுக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதுமாத்திரமல்லாமல் சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

இஸ்ரேலில் பணி புரியும் இலங்கையர்கள் தொடர்பில் மனுஷ நாணயக்கார வெளியிட்ட தகவல்

இஸ்ரேலில் பணி புரியும் இலங்கையர்கள் தொடர்பில் மனுஷ நாணயக்கார வெளியிட்ட தகவல்

 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021