திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் இன்றி அவதியுறும் திருகோணமலை மக்கள்
திருகோணமலை- கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேசத்தில் திடீர் மரண விசாரைண அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோமரங்கடவெல- மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் 15000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அகால மரணங்களின்போது அவற்றை விசாரணை செய்ய திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் இல்லாததன் காரணமாக சடலத்தை திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், வறிய மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதோடு சடலத்தை அடக்கம் செய்ய காலதாமதம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கோரிக்கை
மேலும், இறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கும் நீண்டகாலமாக அலைய வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், வயது முதிர்ந்தோர், நோயாளர்கள் வீடுகளில் உயிரிழந்தால் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய இறப்பு அறிக்கையை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மொரவெவ-கோமரங்கடவல ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உடனடியாக திடீர் மரண விசாரணை அதிகாரியொருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்