அரசாங்கம் ஆட்சிக்கு வர உயிர்த்த ஞாயிறு தாக்குதலே அடிப்படை காரணம் : இந்த உண்மையை மக்கள் அறிவார்கள் - திஸ்ஸ அத்தநாயக்க
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலே அரசாங்கம் ஆட்சிக்கு வர அடிப்படை காரணமாக இருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலை தடுக்கவில்லை என்றும் நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றத்தை சுமத்தினர்.
ஆனால் இந்த அரசாங்கம் எப்படி ஆட்சிக்கு வந்தது என்ற உண்மையை மக்கள் அனைவரும் அறிவார்கள்.
வீடுகளில் தற்போது சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்து வருவதுடன் பசளை தாங்கிகளும் வெடித்து வருகின்றன.காணப்படும் இந்த நிலைமைக்கு அமைய அரசாங்கம் ஆட்சிக்கு வெடித்துக்கொண்டு ஆட்சிக்கு வந்த போல் மீண்டும் வெடித்துக்கொண்டே வீட்டுக்கு செல்ல நேரிடும் .
அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக பயன்படுத்திய மூலோபாய செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்கே வினையாக மாறியுள்ளதுடன் தற்போது அதன் பிரதிபலனை அரசாங்கம் பாரதூரமாக அனுபவித்து வருகிறது என மேலும் தெரிவித்துள்ளார்.