வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! தேடப்பட்டு வந்த முதியவர் சிக்கினார்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் யக்கல காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா - பெலும்மஹர பகுதியில் வைத்து சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய இச்சந்தேகநபர், பலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திறந்த பிடியாணை
அத்துடன், மாரவில நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பல திறந்த பிடியாணைகளின் கீழ் இவர் தேடப்பட்டு வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து போலியான தேசிய அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகவும், தனது மோசடித் திட்டங்களைத் தொடர்வதற்காகவும் அவர் இவ்வாறு போலியான ஆவணங்களைத் தயாரித்து வைத்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

யக்கல காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 43 நிமிடங்கள் முன்