அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் பிரித்தானியரா? வெளிவரும் மர்மம்!!
அமெரிக்காவில், பாகிஸ்தான் நாட்டு பெண் பயங்கரவாதியை விடுவிக்க வேண்டுமெனக் கோரி 4 பேரை ஆலயமொன்றினுள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்த மர்மநபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெத் இஸ்ரேல் சபை ஆலயத்தினுள் திடீரென புகுந்த மர்மநபர் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து , அமெரிக்காவால் வேடி கொய்தா என்று அழைக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், நூதனமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இருப்பினும், 8 மணி நேரத்துக்கு பிறகு பணயக் கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் கழித்து ஏனைய மூவரும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் நால்வரும் காயமின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக டெக்சாஸ் மாகாண ஆளுநர் அபாட் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், குறித்த மர்மநபர் ஆலயத்தினுள் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர்.
ஆபியா சித்திக் எனும் நரம்பியல் விஞ்ஞானிக்கு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு நியூஜோர்க் நீதிமன்றம் 86 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தற்போது அவர் டெக்சாசின் போர்ட்வொர்த்தில் உள்ள பெடரல் மருத்துவ நிலைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்த மர்மநபர் ஆபியா சித்திக்கின் சகோதரராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனாலும், அவரது சகோதரர் ஹூஸ்டனில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த மர்ம நபர் யாரென்று இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில், அவரது சகோதரி பற்றி சத்தமிட்டு அழுததாகவும் அவருக்கு பிரிட்டிஷ் உச்சரிப்பு இருந்ததாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, பிரித்தானிய நபர் ஒருவர் டெக்சாஸில் மரணித்துள்ள விடயத்தை அந்நாட்டு அரச தரப்பு அறிந்துள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நான்கு வருடங்களில் சிதைந்த குடும்பம்!! சோகத்தில் முடிந்த ராஜபக்சக்களின் அரசியலும் இலங்கையின் அழிவும் 15 மணி நேரம் முன்

21 ஆவது திருத்தத்துக்குள் மறைந்திருக்கும் பேராபத்து
19 மணி நேரம் முன்
இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா?
3 நாட்கள் முன்மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022