சிறைச்சாலை பேருந்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்! காவல்துறை வலைவீச்சு
மட்டக்களப்பு(Batticaloa) சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(20.12.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தப்பி சென்ற சந்தேக நபர் சம்மாந்துறை உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ரிசாட் முகம்மட் சாதிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய சந்தேக நபர்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லும் போதே சந்தேக நபர் இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

தப்பிச்சென்ற சந்தேக நபர் கடந்த 7ஆம் திகதி போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தப்பி சென்ற சந்தேக நபரை காவல்துறையினர் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்