பிரித்தானியாவில் மனைவியை கொன்ற ஈழத்தமிழருக்கு 29 ஆண்டு சிறை!

Sri Lanka Law and Order World
By Kanooshiya Jan 17, 2026 02:58 PM GMT
Report

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஈழத்தமிழ்பெண் ஒருவர் அவரது கணவரால் மிக குருரமாக கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்குற்றவாளியான நிமலராஜாவுக்கு 29 ஆண்டுகால சிறைத்தண்டனை நேற்று (16.01.2026) விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூன்று குழந்தைகளின் தாயான 44 வயதான நிலானி அவரது 47 வயதுடைய கணவரான நிமலராஜாவால் குருரமாக கொல்லபட்ட சம்பவம் புலம்பெயர் தமிழ்மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்படி, நிமலராஜாவுக்கு லிவர்பூல் நீதிமன்றத்தில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத சட்டம்: தமிழர்களின் கூட்டு நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாட அழைப்பு!

புதிய பயங்கரவாத சட்டம்: தமிழர்களின் கூட்டு நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாட அழைப்பு!

தனிப்பட்ட தகராறு

குடும்ப தகராறுகள் காரணமாக ஏற்கனவே தனது மனைவியுடன் தொடர்பு கொள்வதற்கு காவல்துறை நிமலராஜாவுக்கு தடை விதித்தால் அவரது மனைவி அவரை குடும்பவிழா ஒன்றுக்கு அழைக்கவில்லை.

பிரித்தானியாவில் மனைவியை கொன்ற ஈழத்தமிழருக்கு 29 ஆண்டு சிறை! | Tamil Man Who Killed Wife In Britain

இதனால் கோபம் கொண்ட நிமலராஜா இந்த குருரக்கொலையில் ஈடுபட்டுள்ளார்.

தனது மனைவியை குத்திக்கொல்வதற்காக அங்காடியொன்றில் கத்தி ஒன்றை வாங்கிய நிமலராஜா அதனை ஒரு பையில் போட்டு மறைத்து பேருந்து ஒன்றில் ஏறி தனது மனைவி பணிபுரியும் கடைக்கு சென்று அங்கு வைத்து அவரை குத்திக்கொலை செய்துள்ளார்.

தனது தாய் தனது தந்தையால் குத்தப்படும் சம்பவத்தை அவரது 17 வயதான மகளும் நேரடியாக பார்த்திருந்தார்.

அதன் பின்னர், கைது செய்யபட்ட நிமலராஜா மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு லிவர்பூல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

கொல்லப்பட்ட நிலானியின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களும் நான்கு வெட்டுக்காயங்களும் இருந்த நிலையில் இது ஒரு வன்மத்துடன் திட்டமிட்ட கொலை என்பது நிருபிக்கப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை அறிவித்த நீதிபதி நிமலராஜா குறைந்தபட்ச தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்படக்கூடாது எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி!

சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி!

யாழில் அனுர வரிசையில் தையிட்டி பிக்கு : புத்தர்சிலை பிக்கு உண்ணாநிலை நாடகம் முடிவு!

யாழில் அனுர வரிசையில் தையிட்டி பிக்கு : புத்தர்சிலை பிக்கு உண்ணாநிலை நாடகம் முடிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்