நீர்கொழும்பு ஜெயில் ஞான அலறலும்... வெலிக்கட முதல் பிந்துனுவேவ வரை பலியான தமிழ் கைதிகளும்
குதிரை ஓடிய பின்னர் லாயத்தை பூட்டிக்கொள்வது போல நீர்கொழும்பு சிறையில் நடந்த பெரும் வன்முறைகளுக்குப் பின்னர் சுடலை ஞானம்... மன்னிக்கவும் மன்னிக்கவும் ஜெயில்ஞானம் கொண்ட தென்னிலங்கை புத்திஜீவிகளின் அலறியடிப்பு கரிசனை குரல்கள் ஒலிக்கின்றன.
இலங்கையின் சிறைத்துறையில் இனி இப்படி செய்யவேண்டும்! அப்படிச்செய்யவேண்டும்! என்ற அட்வைஸ் எல்லாம் அமெரிக்க ஆசீர்வாதம் பெற்ற சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் முதல் எதிரொலிக்கின்றன.
நீர்கொழும்பு சிறையில் இருந்த பெரும்பாலான கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் நீர்கொழும்பு சிறை வளாகம், இனி கைதிகளைத் தங்க வைப்பதற்கு உகந்ததல்ல என சிறை அதிகாரிகள் தீர்மானித்து அந்த கூடத்தை கைவிட பழைய மகாமோதர மருத்துவமனை மற்றும் பழைய போகம்பர சிறை வளாகங்கள் புதிய சிறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகமொத்தம் நீர்கொழும்பு வன்முறைகள் அதிர்கின்றன.
உலக அளவில் சிறைச்சாலை வன்முறைகளில் மிக மோசமான பதிவுகளை தனக்கெனவும் கொண்டுள்ள இலங்கை இந்த மோசமான நிலைமையை சரிசெய்ய முயலவேண்டும் என்ற வகையில் சிங்கள புத்தஜீவிகளின் பத்தி எழுத்துகள் பதறுகின்றன.
இலங்கையின் சிறை அமைப்பை சீரமைக்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளிடம் உதவிகோரவேண்டும் எனவும் என்றும் குரல்கள் வருகின்றன.
இதனைத்தான் குதிரை ஓடிய பின்னர் லாயத்தை பூட்டிக்கொள்ளும் ஒரு கருத்தியல் என்பது உண்மையில் தென்னிலங்கையில் 43 வருடங்களுக்கு முன்னர் இதே யூலை மாதத்தில் சிறிலங்கா சிறைகளின் மிகமோசமான படுகொலைகளமாக இன்றுவரை உள்ள 53 தமிழ் கைதிகள் கொல்லப்பட்ட வெலிக்கடைப் படுகொலைக்கும் 2000 ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி அதிகாலை, பிந்துனுவேவா தடுப்புமுகாமில் இருந்த தமிழ் இளைஞர்களில் 27 பேர் கொல்லபப்ட்டு பலர் காயப்படுத்தப்பட்ட சம்பவங்கள் போன்ற தமிழர்களுக்கு எதிரான சம்பவங்கள்தான் இலங்கையின் சிறைபடுகொலைகளில் முக்கியமான படுகொலைகளாகும்.
சிறிலங்கா அரசாஙகங்கள் இவற்றுக்கு நீதிவழங்கத் தவறிய நீதியின் விளைவே இன்று நீர்கொழும்பில் வந்து நிற்கும் நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகின்றது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 5 மணி நேரம் முன்