யாழ். அராலி கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் - அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 49 வயதான செல்லையா சிவகுமார் என்பவரது சடலமே இன்று (09) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்று காலை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக மிதப்பதை வேறு கடற்றொழிலாளர்கள் அவதானித்தனர்.
யாழ் போதனா வைத்தியசாலை
பின்னர் இது குறித்து உறவினர்களுக்கும், வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 6 மணி நேரம் முன்