கத்தாரில் இன்று அதிகாலை எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
கத்தார் நாட்டின் தோஹாவிற்கு வடக்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில், ஒரு எண்ணெய்க் கப்பல் மீது இரண்டு எறிகணைகள் தாக்கியதில், கப்பலின் நீர்மட்டத்திற்கு மேலே உள்ள மேல்தளத்தில் சேதம் ஏற்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் அலுவலகம் (UKMTO)இன்று(01) புதன்கிழமை அதிகாலை தெரிவித்தது.
UKMTO,விடுத்த எச்சரிக்கையில், எறிகணைகளில் ஒன்று கப்பலில் தீயை ஏற்படுத்தியதாகவும், அது பின்னர் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், இரண்டாவது எறிகணை கப்பலின் இயந்திர அறைக்குள் வெடிக்காமல் இருப்பதாகவும், அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது.
எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை
எறிகணைகளின் தன்மை மற்றும் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அது தெரிவித்தது.

அப்பகுதியைக் கடந்து செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாகத் தெரிவிக்குமாறும் அந்த அமைப்பு அறிவுறுத்தியது.
ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, பெப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்