மீண்டும் அதிகரிக்கப்படுமா வரி - அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டின் 6.8 மில்லியன் மக்களில் 4 மில்லியன் மக்கள் பல்வேறு மானியங்களைக் கோரும் சூழ்நிலையில் வரிகளை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான பிரகடனத்தின்படி, நாட்டின் ஆதரவற்ற மக்களை வாழ வைப்பதற்கு மக்களும் பொறுப்பாவர்.
வரிவிதிப்பு அதிகமாக இருக்க வேண்டும்
அரசாங்கம் உருவாக்குவதற்கும் செலவழிப்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், பணவீக்கம் 100% க்கு அருகில் இருப்பதால் அதிக பணம் சம்பாதிக்க முடியாது.
எனவே வரிகள் முடிந்தவரை அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் மின்சார கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சுமுக பாதுகாப்பு கட்டணம் என தெரிவித்து 2.5 வீத வரி மின்கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.இதனால் மீண்டும் மின் கட்டணத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை
இது பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து செல்கிறது. இதனால் பலர் தமது அன்றாட வேலையை இழந்து அல்லல்படும் நிலையில் வரிகளை தொடர்ந்து அதிகரித்து செல்வது மக்களை பட்டியினியின் விளிம்பிற்கே இட்டுச் செல்லும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர்.