ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் பற்றி எரியும் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை
ஈரான்(iran) தொடர்ந்து ஏவுகணைகளை வீசி தக்குதல் நடத்தினால் தெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவ தளபதிகளுடன் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான மதிப்பீட்டின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈரான் மக்களை பணயக்கைதிகளாக மாற்றியுள்ள சர்வாதிகாரி
"ஈரானிய சர்வாதிகாரி, ஈரான் குடிமக்களை பணயக்கைதிகளாக மாற்றி, இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான குற்றவியல் தாக்குதலுக்கு அவர்களை, குறிப்பாக தெஹ்ரானில் வசிப்பவர்களை அதிக விலை கொடுக்க வேண்டிய ஒரு யதார்த்தத்தை உருவாக்குகிறார்." என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வெளியே உள்ள ரிஷோன் லெஜியனில் நேற்று(13) இரவு ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் பல வீடுகள் சேதமடைந்தன.இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
மீட்பு நடவடிக்கையில் டசின் கணக்கான மீட்பு படையினர்
சம்பவம் நடந்த இடத்தில் டசின் கணக்கான மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
