நாளை வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளைய தினம் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளை (20) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதேவேளை, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெப்பமான வானிலை நிலவும் பிரதேசங்களில் உள்ள மக்கள் வெப்பநிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவதற்கான வழிகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
