மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: திருப்பி விடப்பட்ட சிறிலங்கன் விமானம்
மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் போர் சூழ்நிலைக்கு மத்தியில், பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் விளைவாக, மோதல் மண்டலத்தைத் தவிர்ப்பதற்காக லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய வழித்தடங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த வழித்தட மாற்றங்கள் ஐரோப்பாவிற்கான (Europe) விமானங்களுக்கான விமான நேரங்களை நீட்டிக்கக்கூடும் என்றும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
திருப்பி விடப்பட்ட விமானங்கள்
இன்று (13) லண்டனில் (London) இருந்து கொழும்புக்கு வரும் UL504 விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக டோஹாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கொழும்பிலிருந்து பாரிஸுக்குச் (Paris) செல்லும் UL501 விமானமும் குறித்த வான்வெளியைத் தவிர்ப்பதற்காக திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்த மேலதிக தகவல்களை இலங்கையினுள் 1979, சர்வதேசம் +94 11 777 1979, வட்ஸ்எப் +94 74 444 1979 என்ற இலக்கங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
