இந்தியாவிற்குள் நிலக்கீழ் சுரங்கங்களுடாக ஊடுறுவும் பயங்கரவாதிகள் : வலுக்கும் உச்சக்கட்ட மோதல்
இந்தியாவின் (India) எல்லைகளை கடப்பதற்கும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் பாகிஸ்தானுக்கு (Pakistan) ஆதரவான தீவிரவாதிகள் நிலக்கீழ் சுரங்கங்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில், இடம்பெற்ற காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதலானது சூடிபிடித்து இரு நாடுகளுக்கிடையிலும் ஒரு போர் வெடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தநிலையில், மாறி மாறி இரு நாடுகளும் தங்களது தாக்குதல் குறித்த அறிவிப்புக்களை வெளிவிடுவதும் எச்சரிக்கை விடுவதும் உலக நாடுகளின் இடையில் பாரிய பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்குலுக்காக ஹமாஸிற்கு ஆதரவான பயங்கரவாதிகள் நிலக்கீழ் சுரங்கங்கள் ஊடாக சென்று தாக்குதல் நடத்தும் அந்த முறைமையை தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவான தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனுடன் தொடர்படைய 22 நிலக்கீழ் சுரங்களை ஜம்மு, காட்டா மற்றும் சாமா போன்ற இடங்களில் இந்திய இராணுவம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஊடுறுவலை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய இராணுவம் தள்ளப்பட்டுள்ள நிலையில், இதனை இந்திய இராணுவம் எவ்வாறு எதிர் கொள்ள போகின்றது, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் சூழல், பாகிஸ்தானின் அடுத்த நகர்வு, உலகநாடுகளின் முக்கிய நகர்வும் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
