புதிய அரசியலமைப்பு உருவாக்கம் - ஆளும் தரப்புக்குள் வெடித்தது மோதல்
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் விதம் குறித்து தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) .
இன்று (22) நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், 1972 குடியரசு அரசியலமைப்பு மற்றும் முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவது ஆகியவை நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்கள் மூலம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த முறை எதுவும் பார்க்கப்படவில்லை.
நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றுவதற்காக இருப்பதாகவும், வேறு இடங்களில் தயார் செய்து அனுப்பப்படும் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிக்னல் கம்பம் போல் கைகளை உயர்த்த மாட்டேன் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
விடயத்தை அறிந்தவர் பேசுவதற்கு 5 நிமிடங்களும், பொருள் தெரியாதவர்களுக்கு சரளமாக பேசுவதற்கு 15 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.