பக்கவாதத்தால் படுக்கையில் கிடந்த தந்தையை அடித்தே கொன்ற மகன் - தாய் படுகாயம் (படங்கள்)
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Jaso
தந்தையை அடித்து கொன்ற மகன்
47 வயதுடைய திருமணமாகாத மகன் தடியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கலுகிஸ்ஸ - கல்லுபர பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான வெலிகொட நோயல் டி சில்வா என்பவரே இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பக்கவாத நோய்
தாக்குதல் நடத்தியவரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த தந்தை பக்கவாத நோயால் படுக்கையில் படுத்திருந்ததாகவும், சந்தேக நபர் தலையில் அடித்ததில் அவர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி