ஐ.நாவும் ஈழத்தமிழர்களும்

United Nations Sri Lankan Tamils Sonnalum Kuttram
By Sumithiran Oct 02, 2025 04:52 PM GMT
Report

இலங்கையில் தமிழருக்கு உரிமை வேண்டி நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 16 வருடங்கள் கடந்தோடிவிட்டன.

  இந்த இன அழிப்பு போரில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டதும் இராணுவத்திடம் தமது உறவுகளை கொடுத்தும் அவர்கள் பின்பு காணாமல் போன நிலையில் இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என நீதி கேட்டு வீதியில் வருடக்கணக்காக போராடும் உறவுகள்.

இந்த நிலையிலேயே வருடந்தோறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூடுகிறது.இந்தக்கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரேயே இலங்கையில் தமிழர் தரப்பில் ஆரவாரம் அதிகமாகி விடும் என்றார் ஒருவர்.

ஏன் என்று கேட்டேன். இல்லை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் தமிழமக்களை கொன்றொழித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற மனநிலை அவர்களுக்கு என்றார் அவர்.

இந்தா பாருங்கள் இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூட்டத்தொடர் வருவதற்கு முன்னர் வருகை தந்தார்.இவ்வாறு வந்தவர் தமிழர்களின் ஆன்மா அலறும் செம்மணிக்கும் வந்தார். ஊடகங்களும் அவரது வருகைக்கு பெரிய விம்பத்தை கொடுத்தது. ஆனால் என்ன நடந்தது என்று கேட்கிறார் அவர்.

அத்துடன் இன்னுமொரு விடயத்தையும் அவர் சொன்னார் அதுதான் ஆக அதிர்ச்சியாகவும் இருந்தது. அதாவது சர்வதேச விசாரணையை தமிழ் மக்கள் கோரி வரும் நிலையில் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டிலேயே பொறுப்புக்கூறலுக்கான தீர்வை எட்டமுடியும் என்று தெரிவித்து வருகிறது. ஆக சிறிலங்கா அரசின் நிலைப்பாடோடு கிட்டத்தட்ட ஐ.நாவும் இறங்கி வந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 அப்படியென்றால் தமிழரின் இதுநாள்வரையான கோரிக்கை என்றேன்…

அதற்கு அடுத்ததாக அவர் சொன்ன செய்திதான் அதிர்ச்சியாக இருந்தது.

அதாவது வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அங்கிருந்து வெளியேறுமாறு ஐ.நாவிற்கு மகிந்த அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் வெளியேற தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது வன்னியில் உள்ள தமிழ் மக்கள் தமக்கு பாதுகாப்பில்லை. நாதியற்ற தம்மை விட்டு விட்டு போக வேண்டாம் என கோரி ஐ.நா அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அந்த மக்களின் அழு குரல்களை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு வெளியேறிய ஐ.நாவா தமிழ் மக்களுக்கு தீர்வை மேசையில் தரப்போகிறது என்று கேட்டார் அவர்.

அத்துடன் முன்னாள் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனும் யுத்தம் முடிந்த கையோடு வன்னிக்கும் வந்தார் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கான தீர்வு 13 பிளஸ் என்றார்.

  தற்போது 13 பிளஸ் எங்கே மகிந்த எங்கே என அவர் ஒரு போடு போட்டார்.

 இறுதியாக வடிவேலு பாணியில் எத்தனை காலத்திற்குதான் தமிழ் மக்கள் ஐ.நா வை நம்பிக்கொண்டிருக்கப்போகிறார்களோ….?  என்று அவர் கேட்டதும் சரிபோலவே படுகிறது


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025