ஐ.நாவும் ஈழத்தமிழர்களும்

United Nations Sri Lankan Tamils Sonnalum Kuttram
By Sumithiran Oct 02, 2025 04:52 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

இலங்கையில் தமிழருக்கு உரிமை வேண்டி நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 16 வருடங்கள் கடந்தோடிவிட்டன.

  இந்த இன அழிப்பு போரில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டதும் இராணுவத்திடம் தமது உறவுகளை கொடுத்தும் அவர்கள் பின்பு காணாமல் போன நிலையில் இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என நீதி கேட்டு வீதியில் வருடக்கணக்காக போராடும் உறவுகள்.

இந்த நிலையிலேயே வருடந்தோறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூடுகிறது.இந்தக்கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரேயே இலங்கையில் தமிழர் தரப்பில் ஆரவாரம் அதிகமாகி விடும் என்றார் ஒருவர்.

ஏன் என்று கேட்டேன். இல்லை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் தமிழமக்களை கொன்றொழித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற மனநிலை அவர்களுக்கு என்றார் அவர்.

இந்தா பாருங்கள் இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூட்டத்தொடர் வருவதற்கு முன்னர் வருகை தந்தார்.இவ்வாறு வந்தவர் தமிழர்களின் ஆன்மா அலறும் செம்மணிக்கும் வந்தார். ஊடகங்களும் அவரது வருகைக்கு பெரிய விம்பத்தை கொடுத்தது. ஆனால் என்ன நடந்தது என்று கேட்கிறார் அவர்.

அத்துடன் இன்னுமொரு விடயத்தையும் அவர் சொன்னார் அதுதான் ஆக அதிர்ச்சியாகவும் இருந்தது. அதாவது சர்வதேச விசாரணையை தமிழ் மக்கள் கோரி வரும் நிலையில் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டிலேயே பொறுப்புக்கூறலுக்கான தீர்வை எட்டமுடியும் என்று தெரிவித்து வருகிறது. ஆக சிறிலங்கா அரசின் நிலைப்பாடோடு கிட்டத்தட்ட ஐ.நாவும் இறங்கி வந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 அப்படியென்றால் தமிழரின் இதுநாள்வரையான கோரிக்கை என்றேன்…

அதற்கு அடுத்ததாக அவர் சொன்ன செய்திதான் அதிர்ச்சியாக இருந்தது.

அதாவது வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அங்கிருந்து வெளியேறுமாறு ஐ.நாவிற்கு மகிந்த அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் வெளியேற தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது வன்னியில் உள்ள தமிழ் மக்கள் தமக்கு பாதுகாப்பில்லை. நாதியற்ற தம்மை விட்டு விட்டு போக வேண்டாம் என கோரி ஐ.நா அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அந்த மக்களின் அழு குரல்களை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு வெளியேறிய ஐ.நாவா தமிழ் மக்களுக்கு தீர்வை மேசையில் தரப்போகிறது என்று கேட்டார் அவர்.

அத்துடன் முன்னாள் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனும் யுத்தம் முடிந்த கையோடு வன்னிக்கும் வந்தார் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கான தீர்வு 13 பிளஸ் என்றார்.

  தற்போது 13 பிளஸ் எங்கே மகிந்த எங்கே என அவர் ஒரு போடு போட்டார்.

 இறுதியாக வடிவேலு பாணியில் எத்தனை காலத்திற்குதான் தமிழ் மக்கள் ஐ.நா வை நம்பிக்கொண்டிருக்கப்போகிறார்களோ….?  என்று அவர் கேட்டதும் சரிபோலவே படுகிறது


ReeCha
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026