சவால்களுக்கு மத்தியில் திருமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
தமிழ் மக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவேந்தலின் 05ஆம் நிகழ்வுகள் திருகோணமலையில் (Trincomalee) முன்னெடுக்கப்பட்டன.
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் கடந்த 15ஆம் திகதியில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளிலும், சர்வதேசத்திலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருகோணமலை சிவன் கோவில் பகுதியில் தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த தினம் கடந்த 15.09.2025 அன்றிலிருந்து மக்களாலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களாலும் திலீபனின் திருவுருவப் படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டு வந்தது.
புதிய திருவுருவப் படம்
கடந்த 4 நாட்கள் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று (19) காலை காவல்துறையினரால் திருவுருவப்படம் அகற்றப்பட்டதுடன், குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்களும் சேதமாக்கப்பட்டது.
இந்நிலையில் பல சவல்களுக்கு மத்தியிலும் புதிதாக தியாக தீபம் திலீபனுக்கான இன்னுமொரு திருவுருவப் படம் தாயார்படுத்தப்பட்டு 05ம் நாள் நினைவேந்தல் நேற்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
அத்துடன் நினைவு கூரலின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பான கண்டனமும் சமூக செயற்பாட்டாளர்களால் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
