தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல்களை குழப்பும் கஜேந்திரகுமார்: அம்பலப்படுத்தும் மணிவண்ணன்

Sri Lankan Tamils Jaffna Gajendrakumar Ponnambalam
By Shalini Balachandran Sep 15, 2025 01:40 AM GMT
Report

தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் (Gajendrakumar Ponnambalam) மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் (V. Manivannan) குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு, அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது தமது எஜமானர்களுக்கு சேவகம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் (Jaffna)  ஊடக அமையத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

போலந்தை அடுத்து ருமேனியாவில் ரஷ்ய டிரோன்: ஐரோப்பாவில் பதற்றம்

போலந்தை அடுத்து ருமேனியாவில் ரஷ்ய டிரோன்: ஐரோப்பாவில் பதற்றம்

உண்ணாவிரதம் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நினைவு வாரத்தில் நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் தொடர்பிலும் அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்களில் அவர் பட்ட வேதனைகளையும் ஆவணப்படுத்தி ஆவண காட்சி கூடத்தை கடந்த இரண்டு வருடங்களாக நடாத்தி வருகின்றோம்.

இம்முறை நாம் காட்சி கூடம் நடாத்தும் , மாநகர சபைக்கு சொந்தமான காணியை எம்மை காட்சி கூடம் நடாத்த விடாது தடுக்கும் முகமாக சைக்கிள் கட்சியினர் அவ்விடத்தை முன் பதிவு செய்துள்ளனர் அதனால் எமக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல்களை குழப்பும் கஜேந்திரகுமார்: அம்பலப்படுத்தும் மணிவண்ணன் | Thileepan Remembrance Blocked By Political Rivalry

எங்களுடைய நிகழ்வுகள் மிக உணர்வு பூர்வமாக அவ்விடத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளையும் மாவீரர் நிகழ்வுகளையும் குறித்த காணியில் நடத்தி வந்தோம்.

இந்நிலையிலையே அந்த காணியை தற்போது சைக்கிள் கட்சியினர் முன் பதிவு செய்துள்ளனர்.

யாழில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது

அரச தரப்பு

இவர்கள் அரச தரப்புடன் இணைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை நீர்த்து போக செய்வதற்கு பல வருடங்களாக முயன்று வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாகவே தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளை நாங்கள் நடாத்தகூடாது எனவும் அவரது நினைவுகளை சுமந்த ஆவணப்படுத்தல்கள் காட்சி கூடத்தை நடாத்த விட கூடாது என்பதற்காக நாம் வழமையாக செய்யும் யாழ் மாநகர சபை காணியை அடாத்தாக தாமும் முன் பதிவு செய்துள்ளனர்.

தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல்களை குழப்பும் கஜேந்திரகுமார்: அம்பலப்படுத்தும் மணிவண்ணன் | Thileepan Remembrance Blocked By Political Rivalry

மாநகர சபைக்கு சொல்லி இருக்கின்றனர், தமக்கு தராமல் விட்டால் யாருக்கும் அந்த காணியை கொடுக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பமாகும் நிலையில் இவர்கள் இவ்வாறாக அடாத்தாக செயற்படுகின்றனர்.

யாழில் வடமாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இருவர்

யாழில் வடமாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இருவர்

ஆயுத குழுக்கள்

இவர்கள் தற்போது முன்னாள் ஆயுத குழுக்களுடனும் மற்றும் தேசிய மக்கள் சக்தியுடனும் வெளிப்படையாக இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைத்துள்ளனர்.

ஏனெனில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பவர்கள் அல்ல தியாக தீபத்தின் வீரசாவுக்கு காரணமானவர்கள் உடன் தான் இவர்கள் தற்போது கூட்டு வைத்துள்ளனர்.

தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல்களை குழப்பும் கஜேந்திரகுமார்: அம்பலப்படுத்தும் மணிவண்ணன் | Thileepan Remembrance Blocked By Political Rivalry

தாயகத்தில் நடைபெறும் நினைவேந்தல்களை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்பும் விதமாகவே கடந்த காலம் தொட்டு செயற்பட்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை மிக உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு முன்னெடுத்து வரும் போது அதனை குழப்பினர்.

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பினர், நல்லூரில் தியாக தீபத்தின் நிகழ்வுகளை குழம்பினர் மற்றும் மாவீரர் துயிலுமில்லங்களில் குழப்பங்களை ஏற்படுத்தினார்.

பிரிந்த காதலியை சுடச் சென்ற காதலன் : காதலியின் முகத்தை பார்த்ததும் எடுத்த முடிவு

பிரிந்த காதலியை சுடச் சென்ற காதலன் : காதலியின் முகத்தை பார்த்ததும் எடுத்த முடிவு

நினைவேந்தல் 

இவ்வாறாக அவர்கள் தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகளை காலகாலமாக குழப்பி வருகின்றனர்.

இந்தநிலையிலேயே, தியாக தீபத்தின் ஆவண காட்சி கூடத்தை குழப்பும் விதமாக அக்காணியை தாம் முன் பதிவு செய்து அந்த காணியில் நிகழ்வுகளை நடாத்த விடாது தடுத்துள்ளனர்.

தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல்களை குழப்பும் கஜேந்திரகுமார்: அம்பலப்படுத்தும் மணிவண்ணன் | Thileepan Remembrance Blocked By Political Rivalry

தியாக தீபத்தின் தியாகத்தை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துக்கூறும் முகமாகவே அக் காட்சி கூடத்தை அமைத்து அவற்றின் ஊடாக நாம் வரலாற்றை கடத்தி வந்தோம்.

அதனை பொறுக்க முடியாதவர்கள் , தமது ஏவலாளிகளாக இவர்களை பயன்படுத்தி அதனை தடுத்துள்ளனர்.

தமது சொத்துக்களையும் மற்றும் தமது சுயலாபத்திற்காகவும் தமிழ் மக்களை பகடை காய்களாக்கும் செயற்பாட்டை கஜேந்திரகுமார் அணியினர் கைவிட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வீட்டை உடைத்து 80 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்கள் கொள்ளை!

மட்டக்களப்பில் வீட்டை உடைத்து 80 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்கள் கொள்ளை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026