விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் சீமானை ஆதரிப்பது ஏன்..! திருமாவளவன் கேள்வி
விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் வரிந்துகட்டி சீமானை(seeman) ஆதரிப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்(thirumavalavan) கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னையில்(chennai) இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
கோழை தமிழ் தேசியவாதிகள்
கோழை தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளார்கள். பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.

பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசுவோர் பாஜகவின் கொள்கைப் பரப்பு அணி போல் செயல்படுகிறார்கள். பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரித்ததுண்டா
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் ஆதரிக்கின்றனர். அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் என்றாவது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரித்ததுண்டா?

பா.ஜ.கவின் கொள்கை பரப்பு அணி போல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார். இது வெறும் திராவிட எதிர்ப்பு அரசியல் அல்ல, நமது கோட்பாட்டுக்கு எதிரான அரசியல் என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 17 மணி நேரம் முன்