யாழ் பல்கலையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது தியாகி சிவகுமாரனின் 48வது நினைவுதினம்! (படங்கள்)
தியாகி பொன். சிவகுமாரனது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 4 மணியளவில் கைலாசபதி கலையரங்கின் முன்பாக மாணவர்களால் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
பொன் சிவகுமாரன் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
யாழில் பல இடங்களில் அனுஷ்டிப்பு
இதேவேளை, தியாகி பொன். சிவகுமாரனது 48 ஆவது நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரனது நினைவிடத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தலில் ஈகைச்சுடரினை ஏற்றி அகவணக்கம், மலரஞ்சலி என்பனவும் இடம்பெற்றது.
அத்துடன், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
