தமிழ் மண்ணில் அரங்கேறிய ஆயிரமாயிரம் பட்டலந்த சம்பவங்கள் : புட்டு வைக்கும் சிவஞானம்

Jaffna Ranil Wickremesinghe ITAK
By Sumithiran Mar 13, 2025 02:15 PM GMT
Report

பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்

இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரணிலுக்கு தொடர்பு

இப்போது பலரும் பேசி வருகின்ற பட்டலந்த விவகாரம் அந்தக் காலத்திலேயே மிகப் பெரியளவில் பேசப்பட்டது. அதாவது முன்னாள் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe)இளமைக் காலத்திலே அதற்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாகவே பேசப்பட்டும் வந்தது. அந்த ஆணைக்குழு அறிக்கைகூட இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாகவும் இதனை உறுதிப்படுத்தியும் இருக்கிறது.

தமிழ் மண்ணில் அரங்கேறிய ஆயிரமாயிரம் பட்டலந்த சம்பவங்கள் : புட்டு வைக்கும் சிவஞானம் | Thousands Of Batalanda Murder On Tamil Soil

ஆனபடியால் அவர்களைப் பொறுத்தவரையில் இது காலங்கடந்தது என்றாலும் அதனைப் பகிரங்கப்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சரி என்றே நான் நினைக்கிறேன்.

உண்மையை சொல்ல போனால் இந்த பட்டலந்த படுகொலை விவகாரம் என்பது அந்த நாட்டிலே இருக்கிற அந்த மக்களுக்காக அங்கே செய்கிற விடயம். ஆனால் ஆட்சியில் இருக்கிற எந்த அரசாங்கமும் தமிழர்களுக்கு என்ன செய்தாலும் அது சரி என்று நியாயப்படுத்துற வேலையை தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகிற அரசாங்கங்கள் செய்து கொண்டு வந்திருக்கிறது.

பட்டலந்தை கொலைகளின் பின்னணியில் ரணில் : அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்

பட்டலந்தை கொலைகளின் பின்னணியில் ரணில் : அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்

அது தான் இவர்களது பொலிசியாகவும் அதாவது அவர்களது நிலைப்பாடாகவும் இருக்கிறது. ஏனெனில் காட்சிகள் மாறுகிறதே ஒழிய ஆட்கள் மாறவில்லலை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படாது.

இதனைப்பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக் கொள்ளட்டும்

இந்த பட்டலந்த விவகாரம் சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் ஏதும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அது அவர்களே சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படி தான் இப்போது நடக்கிறது. இதனைப்பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக் கொள்ளட்டும்.

தமிழ் மண்ணில் அரங்கேறிய ஆயிரமாயிரம் பட்டலந்த சம்பவங்கள் : புட்டு வைக்கும் சிவஞானம் | Thousands Of Batalanda Murder On Tamil Soil

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவரும் சேர்ந்து இவரும் சேர்ந்து என அவர்கள் எல்லோருமாக இப்படி எத்தனை பட்டலந்தவை எமது மண்ணிலே நடத்தியிருக்கிறார்கள்.

ஒரு பட்டலந்த பற்றி இப்போது அங்கு அவர்கள் பேசுகின்றார்கள். ஆனால் இப்படி எத்தனை ஆயிரம் பட்டலந்த கொடுமைகள் இங்கு நடந்திருக்கின்றன. இங்கு எவ்வளவு பேர் கொடுமைப்படுத்தப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள் அவை எல்லாவற்றுக்கும் விசாரணை நடக்கப் போகிறதா என்றால் இல்லை.

உடைக்கப்படுகிறதா தமிழரசுக்கட்சி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவஞானம்!

உடைக்கப்படுகிறதா தமிழரசுக்கட்சி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவஞானம்!

ஆக பட்டலந்த போல பற்பல சம்பவங்கள் எங்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ளதற்கு நீங்கள் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறீர்கள் என்றும் உங்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற பல்வேறு கேள்வியை நாங்கள் எழுப்பலாம். அதைச் செய்வோம் என மேலும் தெரிவித்தார்.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024