பிரதேச செயலாளரை அச்சுறுத்திய முன்னாள் ஆளுநரின் கணவர் : பின்னர் நடந்த சம்பவம்

Sri Lanka Police Nuwara Eliya
By Sumithiran Sep 02, 2024 07:42 PM GMT
Report

அம்பேவெல பிரதேசத்தில் அரச காணியை வழங்காததற்கு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் நிலுகா ஏகநாயக்கவின்(Niluka Ekanayake) கணவர் நேற்று (01) காலை நுவரெலியா காவல்துறை தலைமையகத்திற்கு வந்து பிரதேச செயலாளரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

 நிலுகா ஏகநாயக்க மத்திய மாகாண ஆளுநராக இருந்த காலத்தில், அவரும் அவரது கணவரும் நுவரெலியாவில்(nuwara eliya) உள்ள கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள அரச காணியைப் பயன்படுத்தினர், பின்னர் அந்த நிலத்தை நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் மேயராக இருந்த வர்த்தகர் ஒருவருக்கு விற்றுள்ளனர்.

காணியை வழங்குவதற்கு சட்டரீதியாக உரிமை இல்லை 

அந்த காணிக்குப் பதிலாக, நுவரெலியா அம்பேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் காணியை அபிவிருத்திக்காக வழங்குமாறு முன்னாள் ஆளுநரின் கணவர் நுவரெலியா பிரதேச செயலாளர் டி.ஏ.பி. தனசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த காணியை வழங்குவதற்கு சட்டரீதியாக தமக்கு உரிமை இல்லை என பிரதேச செயலாளர், முன்னாள் ஆளுநரின் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய முன்னாள் ஆளுநரின் கணவர் : பின்னர் நடந்த சம்பவம் | Threatened The Nuwara Eliya Divisional Secretary

இச்சம்பவத்தின் பின்னர் குறித்த காணியை வழங்காவிடின் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பார்த்துக்கொள்வோம் என அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பிரதேச செயலாளர் நுவரெலியா தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைப்பு : குறிக்கப்பட்டது திகதி

நாடாளுமன்றம் கலைப்பு : குறிக்கப்பட்டது திகதி

கணவரை மன்னிக்குமாறு கேட்ட முன்னாள் ஆளுநர்

இதேவேளை, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் நிலுகா ஏகநாயக்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு அளிக்குமாறும் தனது கணவரை மன்னிக்குமாறும் கேட்டுள்ளார்.

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய முன்னாள் ஆளுநரின் கணவர் : பின்னர் நடந்த சம்பவம் | Threatened The Nuwara Eliya Divisional Secretary

மேலும் இச்சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்கத் தயார் என அவரது கணவரும் பிரதேச செயலாளரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அதன்படி முன்னாள் ஆளுநரின் கணவர் நுவரெலியா காவல்நிலையத்திற்கு வந்து பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கோரினார். மேலும் தொலைபேசி அழைப்பை எடுக்கும்போது தான் குடிபோதையில் இருந்ததாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார்.

இனிமேலும் இவ்வாறு மிரட்டமாட்டேன் என காவல்துறை புத்தகத்தில் எழுதிவிட்டு பிரதேச செயலாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

நுவரெலியா பிரதேச செயலாளருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பை விடுத்த சம்பவம் தொடர்பில் இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (30) காவல்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026