திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Thulsi
வீதியால் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (2) பகல் ஹேவாஹேட்ட நகரில் இருந்து மூக்குலோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கோளாறு காரணமாக தீ
ஹேவாஹேட்ட நகரில் வாடகைக்கு மக்களை ஏற்றிகொண்டு சென்ற முச்சக்கரவண்டி ரூக்வூட் தோட்ட பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் உள்ள மின் இணைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு தீ பற்றி எரிந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரிக்கிலகஸ்கட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
