சொத்துத் திருட்டு வழக்கில் கொத்தாக சிக்கிய சந்தேக நபர்கள்!
சொத்துத் திருட்டு வழக்கில் தேடப்பட்டு இரண்டு பெண் சந்தேகநபர்கள், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஆண் சந்தேகநபர் ஒருவர் மற்றும் மற்றொரு பெண் சந்தேகநபர் என மொத்தம் நான்கு பேர் மவுண்ட் லவினியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 18 ஆம் தேதி ஒரு வீட்டிற்குள் புகுந்து ரூ. 1,41,00,000 மதிப்புள்ள தங்கப் பொருட்களைத் திருடிய குற்றம் தொடர்பாகத் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி இந்த திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (06.08.2026) தெகிவளை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
நான்கு பேர் கைது
மேலும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபர் ஹட்டன் பதானா பகுதியில் கைது செய்யப்படார்.

குறித்த சந்தேக நபர்களால் 8 ஜோடி தங்கக் காதணிகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு கைக்காப்பு, 10 தங்க நெக்லஸ்கள், ஒரு கைக்காப்பு மற்றும் 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட நகைகள் திருடபட்டுள்ளது.
இந்த நகைகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு, மவுண்ட் லவினியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களுக்கு 28, 46, மற்றும் 53 வயது என்றும், அவர்களில் ஒருவருக்கு 28 வயது என்றும், அவர்கள் ஹட்டன் பதானா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை விசரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மவுண்ட் லவினியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
உச்சக்கட்ட பதற்றம் : அடுத்தடுத்து சிறைச்சாலைகளில் வெடித்த வன்முறை - இருவர் பலி : நடந்த துப்பாக்கிச் சூடு - நீதியமைச்சரின் அறிவிப்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |