மக்களைப் பெரும் அச்சத்தில் உறைய வைத்த ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர்களின் ஆயுதத்துடனான புகைப்படங்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ. சந்திரகாந்தன் மற்றும் அவருடை ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர்கள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆயுத கலாசாரம் மீண்டும் அரங்கேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் நேற்றைய தினம்(28) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் ஆயுதத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து மட்டக்களப்பு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
ஆயுதத்துடனான புகைப்படம்

கொக்கு சுடுவதற்காக இந்த ஆயுதம் பாவிக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் எதிர்காலங்களில் மனிதர்களையும் வேட்டையாடலாம் என்ற சந்தேகமும் உருவாகியுள்ளதாக அறிய முடிகின்றது.
எது எவ்வாறாக இருந்தாலும் ஒரு அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள் மாநகரசபை உறுப்பினராக இருந்தவர்கள் குறித்த ஆயுதத்துடன் காட்சியளிப்பது மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொக்குகள் மீது பாய்ந்த குண்டுகள் மனிதர்கள் மீது பாய்வதற்கு முன் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.