தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கோட்டாபயவிற்குமிடையில் இடம்பெறவுள்ள சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும், இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
அதன்படி நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட அரச தலைவரிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 10.30 இற்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளுள், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளன.
இந்த சந்திப்பு கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்டு, பின்னர் மார்ச் 15 ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
ஆயினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த சந்திப்பு இன்றைய நாளுக்கு பிற்போடப்பட்டது.
இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில், நிரந்த தீர்வு குறித்து வலியுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ என அறியப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
