இலங்கையில் 2,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை
By Sathangani
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்துடன் (17) ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
விலை நிலவரம்
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையிலும் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |