நாட்டில் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு!
sri lanka
people
tomorrow power cut
pucsl
By Thavathevan
இலங்கையில் நாளை தினம் (5) மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (pucsl) தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆறு மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
A தொடக்கம் L வரையான வலயங்களிற்குட்பட்ட பகுதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
P தொடக்கம் W வரையான வலயங்களிற்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி