மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்
ஒவ்வொரு வாரத்திற்குமான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், வாராந்த ராசி பலனை நாம் முன்னரே அறிந்து செயற்பட்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறுவதுடன் சில தீங்குகளில் இருந்தும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இந்நிலையில், இந்த வாரத்தின் வெள்ளி (13) முதல் அடுத்த வாரம் வியாழக்கிழமை (19) வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் பிரச்சினை விலகும். திட்டமிட்டு செயற்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
கையில் பணம் புழங்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சிலரின் கனவு நனவாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

ரிஷப ராசி
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் தடைப்பட்ட வேலை நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட பணம் கைக்கு வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றி அடையும். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
சிம்ம ராசி
தடைபட்ட வேலை நடக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். எடுத்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும்.
செல்வாக்கு உயரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் எதிரிகள் பலவீனமடைவர். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

துலாம் ராசி
பொன் பொருள் சேரும். செல்வாக்குடன் நடைபோடுவீர். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். விருப்பம் பூர்த்தியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.
ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு விலகும். எடுக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கும். உழைப்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில் வேலைகள் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு உண்டு.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |