2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள்
2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, 176,527 மாணவர்கள், அதாவது 62.64%, பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று இரவு (31) வெளியிடப்பட்டதாகத் ஆணையாளர் நாயகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த ஆண்டு, 281,810 தேர்வர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கூறியள்ளார்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெறுபேறுகள்
இதற்கிடையில், 111 மாணவர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 7,477 ஆகும். இது 3.38% ஆகும்.
மேலும் 823 தனித்தேர்வர்களும் அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடப்பிரிவு வாரியான பல்கலைக்கழக சேர்க்கை விகிதங்கள்
உயிரியல் - பாடசாலை 59.56% - தனியார் 58.43%

பௌதீகவியல்- 63.96% - தனியார் 61.59%
வணிகவியல் - 72.02% - தனியார் 66.29%
கலை - 67.57% - தனியார் 63.57%
பொறியியல் தொழில்நுட்பம் - 64.85% - தனியார் 62.65%
உயிரியல் தொழில்நுட்பம் - 71.76% தனியார் 70.24%
இதர பாடங்கள் - 55.39% மொத்தம் 51.45%
மாகாண வாரியான பல்கலைக்கழக சேர்க்கை சதவீதம்
இந்த ஆண்டு மாகாண வாரியான பல்கலைக்கழக சேர்க்கை சதவீதம்:
மேல் மாகாணம் - 69.42%
வடமேற்கு மாகாணம் - 68.48%
வடக்கு மாகாணம் - 66.91%
கிழக்கு மாகாணம் - 66.32%
தென் மாகாணம் - 65.69%
சபரகமுவ மாகாணம் - 64.97%
ஊவா மாகாணம் - 63.53%
மத்திய மாகாணம் - 63.04%
வட மத்திய மாகாணம் - 60.91%
இந்த ஆண்டு பல்கலைக்கழகப் அனுமதிகளை பெற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவிகள் என்றும், உயிரியல் துறையில் மட்டுமே அதிக சதவீதத்தில் மாணவர்கள் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றுள்ளனர் என்றும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு நடைபெற்ற பரீட்சை பெறுபேருகளில் கலைப் பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 32.03 சதவீதம் குறைந்துள்ளதாகத் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உயிரியல், பௌதீகவியல், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் பிற பாடங்கள், அத்துடன் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களின் மீது மாணவர்களிடையே அதிக நாட்டம் இருப்பதாகத் ஆணையாளர் கூறியுள்ளார்.
முதல் மூன்று இடங்கள்
உயிரியல் பிரிவு
முதலாம் இடம் - திலான் சஞ்சனா (றோயல் கல்லூரி, கொழும்பு)

இரண்டாம் இடம் - கிரிஷான் சசிந்து நாம்தாரா (தக்ஷிலா மத்திய கல்லூரி, ஹொரணை)
மூன்றாம் இடம் - தர்ஷனா கோணேஷ் (ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை)
பௌதீகவியல் பிரிவு
தேவேந்திரன் திருக்குமரன் (கிளிநொச்சி மகா வித்தியாலயம்)
தருஷ கிம்ஹான் கம்லத் (மலியதேவ வித்தியாலயம், குருநாகல்)
வினுர பிரசாத் டி மெல் (ஸ்ரீ சுமங்கலா ஆண்கள் கல்லூரி, பாணந்துறை)
வணிகப் பிரிவு
சுபைதீன் மொஹமட் பர்தான் (காத்தான்குடி மத்திய கல்லூரி)
சேனாதி திஹஸ்ன சுமணசேகர (மியூசியஸ் கல்லூரி, கொழும்பு)
திலீப சந்தரேஸ் கருணாரத்ன - (பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா)
கலைப் பிரிவு
அச்சிந்த மிஹிரங்க ரத்நாயக்க (வடமேற்கு றோயல் கல்லூரி, குருநாகல்)
அலியா ஷீனா (தேவி பாலிகா கல்லூரி, கொழும்பு)
மெதுசாரி தினேதியா ரணதுங்க (மியூசியஸ் கல்லூரி, கொழும்பு)
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு
ஹெஷான் அனுஜய வணிகசூரிய (பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா)
சிதிஜ துலான் பண்டார (விஜயபா தேசிய பாடசாலை, மஹவ)
ரிவின் வின்சர (C.W.W. கன்னங்கர மகா வித்தியாலயம், மத்துகம)
உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்பப் பிரிவு
இஷானி மனோதா (பண்டாரநாயக்க மத்திய கல்லூரி, வெயங்கொட, கம்பஹா)
விஹங்க இமாஷா கந்தேராச்சி (ரத்னாவலி பெண்கள் கல்லூரி, கம்பஹா)
ஜயத்மா அமந்தி விஜேசிங்க (இப்பாகமுவ மத்திய கல்லூரி)
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்